ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கு ! இன்று விசாரணை

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை  இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.
2016 தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு  தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.,  ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது .மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று தெரிவித்தது.
பின்பு விசாரணை நடைபெற்ற நிலையில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நவம்பர் 13-ஆம் தேதி வரை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது .அதுவரை வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெறுகிறது.