மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு ! அதிமுக எம்.எல்.ஏ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
2016 தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை  சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது ,இதில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடுத்த மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.