காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து இல்லை -பள்ளி கல்வித்துறை விளக்கம்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் முடிந்த பிறகு வருகின்ற 23-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த முறை காந்தி பிறந்தநாளையொட்டி விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும்,  அன்றைய நாள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வர வைத்து காந்தி சிந்தனைகளை தொடர்பான வகுப்புகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

இதற்கு விளக்கம் அளித்த பள்ளி கல்வித்துறை காலாண்டுத் தேர்வுகள் எந்தவித மாற்றமும்  இல்லை காந்தி சிந்தனையை தொடர்பான நிகழ்ச்சிகளை விருப்பப்பட்ட பள்ளிகள் நடத்திக் கொள்ளலாம். அந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என வெளியான தகவல் வதந்தி என பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.

author avatar
murugan