குபேர பொம்மையை வீட்டின் இந்த இடத்தில் வைத்தால் செல்வம் பெருகும் !

குபேர பொம்மையை பல வீடுகளில் அலங்கார பொருளாக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் பூஜை அறையில் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.இந்த பொம்மையை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் சகல செல்வங்களும் பெரும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

குபேர பொம்மையை புத்த சமயத்தில் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள். மேலும் குபேர பொம்மையை சிரிக்கும் புத்தரின் உருவம் என்றும் கூறி வருகிறார்கள். வாஸ்து படி வடகிழக்கு திசை தான் ஒரு வீட்டின் அதிஷ்டம் தரும் திசையாக கூறப்படுகிறது. அந்த திசையில் சிரிக்கும் குபேர பொம்மையை வைத்தால் நமக்கு சகல செல்வங்களும் கிடைக்கும். இந்த பொம்மையை நாம் எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். ஒரு சாதாரண பொம்மைக்கு இவ்வளவு சக்தி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த பொம்மையின் வடிவமைப்பே. எப்போதும் சிரித்தவாறு இருக்கும் இந்த பொம்மையை பார்த்தால் மனதில் உள்ள கவலைகள் நீங்கும்.

வீட்டில் எப்போதும் சந்தோசம் நிலைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு அந்த பொம்மையை பார்த்தால் நேர் மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் வீட்டில் உள்ள மனக்கஷ்டங்கள் தீரும்.செல்வம் பெருகும்.