பிரபல பல்கலைக்கழகத்தில் பஞ்சாப் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

  • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 வயதுடடைய மாணவி ஆயிஷா ராணா என்பவர் விடுதியில் தங்கி பயோடெக் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தங்கியிருந்த விடுதி தனி அறையில் துப்பட்டாவால் கழுத்தில் தூக்கிட்ட நிலையில், மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனிடையே நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் கல்லூரி நிர்வாகம் கதவை உடைத்து பார்த்தபோது இது தெரியவந்தது. பின்னர் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், மாணவியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்று சென்னை ஐஐடியில் பயின்று வந்த கேரளா மாணவி பாத்திமா அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்