தண்ணீர் பிரச்சினை தொடர்பான கருத்து !புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார் .மோசமான ஆட்சி,ஊழல் உள்ளிட்டவையால் முக்கிய நகரமான சென்னை   வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது  என்றும் மக்களின் சுயநல எண்ணமும் மோசமான அணுகுமுறையும் கூட முக்கிய காரணம் என்று கருத்து தெரிவித்தார்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். தமிழக மக்கள் மீதான கருத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த  நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.அதில், சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்து, நான் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மக்களின் எண்ணத்தையே பிரதிபலித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.