தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று  தனது ட்விட்டர் பதிவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்திருந்தார்.இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த்தார்.அதில், தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது.துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தரம் தாழ்ந்து உள்ளது.தமிழகத்தை பற்றி பேச கிரண்பேடிக்கு என்ன அவசியம், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட பருவமழை பொய்த்ததே காரணம்  என்று பேட்டியளித்தார்.