ரஜினிகாந்துடன் காவல் துறை துணை ஆணையர் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் தமிழக காவல் துறை துணை ஆணையர் திருநாவுக்கரசு சந்தித்துள்ளார். துக்ளக் விழாவில் பெரியார் பேரணி தொடர்பாக ரஜினி பேசியது சர்ச்சையானதால் அவரது வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில்,இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.