ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.காவல்துறையினர் தங்கள் கடமைகளுக்கு உட்பட்டு பணி செய்கிறார்கள் .
சாலைகள் விரிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் .அதற்கு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் துணை நிற்கின்றன. திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.