திடீரென்று முதலமைச்சரை சந்தித்த புகழேந்தி ? காரணம் என்ன ?

வெற்றிபெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என்று புகழேந்தி  தெரிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் திடீரென்று முதலமைச்சர் பழனிசாமியை புகழேந்தி சந்தித்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இமாலய வெற்றிபெற்றதற்கு முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன்.
அதிமுகவில் இணைவதாக இருந்தால் அறிவிப்பு வெளியிடுவேன்.முதல்வரும் நானும் 35 ஆண்டுகால நண்பர்கள், தினகரனால் அனைத்தையும் இழந்துவிட்டேன் என்று தெரிவித்தார்.