இன்று விண்ணில் பாய்கிறது கார்டோசாட் -3 செயற்கைக்கோள்

இன்று கார்டோசாட் -3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.  
இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய வகை செயற்கைகோள்களுடன் இன்று  காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது. பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படுகிறது.இந்த கார்டோசாட் -3 செயற்கைக்கோள் 1,625 கிலோ எடை கொண்டது.
5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைகோள் துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது .மேலும் புவி கண்காணிப்பு, பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவவுள்ளது இந்த செயற்கைகோள்.இந்த நிலையில் நேற்று  பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. இதனையடுத்து இன்று கார்டோசாட் -3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது.