பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் ஏவப்படும் தேதி மாற்றம் -இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் ஏவப்படும் தேதி மாற்றம் -இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் 25ஆம் தேதிக்கு பதில் வரும் 27ஆம் தேதி ஏவப்படும் என்று  இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் மூலமாக இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ வகை செயற்கைகோள்களுடன் வருகின்ற 25-ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.


இந்த நிலையில் இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிஎஸ்எல்விசி-47 ராக்கெட் 25ஆம் தேதிக்கு பதில் வரும் 27ஆம் தேதி ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் தேதி காலை 9.28 மணிக்கு ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube