BREAKING :விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ..!

BREAKING :விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி47 ராக்கெட் ..!

ஆந்திர மாநிலம்  ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் என்ற விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 09 .28 மணிக்கு பிஎஸ்எல்வி- சி47 ராக்கெட் மூலம் மொத்தம் 14 செயற்கைக்கோள்கள் வைத்து விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இந்தியாவுக்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் 13 நானோ  வகை செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு உள்ளது.அந்த 13 செயற்கைக்கோள்களும்  அமெரிக்காவுக்கு சொந்தமானது.
இதற்கான கவுண்ட்டவுன் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக இஸ்ரோ அறிவித்தது. இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் துல்லியமான படங்களை அனுப்பும் திறன் கொண்டது. புவியில் இருந்து 509 கி.மீ தொலைவிலான சுற்று வட்டப்பாதையில்  நிலைநிறுத்தப்பட்டு அங்கிருந்து புவியை கண்காணிப்பதுடன் ,புகைப்படத்தையும் எடுத்து அனுப்ப உள்ளது.
இரவு நேரத்திலும் புவியின் புகைப்படத்தை தெளிவாக எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. இதன் செயல்பாடு 5 ஆண்டுகள் இருக்கும் என இஸ்ரோ  தெரிவித்து உள்ளது. இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவும் 74-வது ராக்கெட் இதுவாகும்.

author avatar
murugan
Join our channel google news Youtube