மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ! ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.இதேபோல் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் முகமது ரஸ்வி வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில்,இந்த அவரச சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில்,தமிழக அரசு தரப்பில் இது வழக்கை உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.