கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு ! நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்தது தொடர்பான விசாரணையை  நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை தோல்வி அடைந்தார் .ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.தூத்துக்குடியில் கனிமொழி வெற்றிபெற்றதை   அவரை எதிர்த்துபோட்டியிட்ட முன்னாள்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது மனுவில் , தேர்தல் பிரசாரத்தின் போது. ஆரத்திக்கு பணப்பட்டுவாடா செய்த ஆதாரங்கள் இருக்கின்றது என்று தெரிவிக்கப்பட்டது.மேலும்  வாக்குகளை விலை கொடுத்து வாங்கியதால், அவரது வெற்றியை செல்லாது என்று  அறிவிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது
இதற்கு பின் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதிக்க கோரி தமிழிசை மனு தாக்கல்  செய்தார்.பின் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசைக்கு அனுமதி அளித்தது  சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தநிலையில் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கில்  தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலாக வழக்கை நடத்த அனுமதி கோரி வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர்  மனு தாக்கல் செய்தார் .உடனே நீதிமன்ற கட்டணம் செலுத்த முத்துராமலிங்கத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது  நீதிமன்றம்.பின்னர் விசாரணையை  நவம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.