மறைமுக தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கு – வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

  •  சில நாட்களுக்கு முன்மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.
  • மறைமுக தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கறிஞர் முகமது ரஸ்வி வழக்கு தொடர்ந்தார்.
  • இந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை டிசம்பர் 19-ம் தேதி ஒத்திவைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்தது.மேலும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதனைதொடர்ந்து  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் முகமது ரஸ்வி வழக்கு தொடர்ந்தார்.அவரது வழக்கில் நடைபெற்ற விசாரணையில்,தமிழக அரசு தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வழக்கு விசாரணையை  டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.