இன்று தொடங்கவுள்ள புரோ கபடியில் 2 போட்டிகள் நடைபெறுகிறது – போட்டி விவரங்கள்..!

உலகக்கோப்பையில் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது புரோ கபடி தொடரின் 7வது சீசன், ஐதராபாத்தில் இன்று (ஜூலை 20) தொடங்குகிறது. இந்த கபடி தொடர் 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்தாண்டு தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ், தெலுங்கு டைடன்ஸ், குஜராத் பார்ச்சூர் ஜெயன்ட்ஸ், உபி யோதா, பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, புனேரி பல்தான் என 12 அணிகள் மோதுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டியில் மோத வேண்டும்.

இன்றைய துவகத்தின் முதல் போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் இரவு 7.30 மணி அளவில் ஐதராபாத்தில் உள்ள கச்சிபவுலி உட்புற மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் பெங்களூர் புல்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகிறது.

author avatar
Vidhusan