நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தால் பெரிய அளவில் சாதிப்பார்கள். இந்தியில் திறமையான நடிகைகள் பலர் உள்ளனர். வாய்ப்பு கிடைத்தால் ஹாலிவுட் படங்களிலும் முத்திரை பதிப்பார்கள் என கூறுகிறார்.
மேலும் அவர்கள் கூறுகையில், பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளத்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். பெண்களுக்கு கணவன்மார்கள், பெற்றோர் உறுதுணையாக இருந்து ஊக்குவிக்க வேண்டும்.’ என்றார்.