பண்டிகை காலத்தில் கொண்டாடப்படும் விழாக்களை நீர் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும்-பிரதமர் நரேந்திர  மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர  மோடி உரையாற்றினார்.அவரது உரையில்,பண்டிகை காலத்தில் கொண்டாடப்படும் விழாக்களை நீர் பாதுகாப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

ஹரியானாவில் மிகக்குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். தனது சொந்த நீர் கொள்கையை வகுத்த முதல் மாநிலமாக மேகாலயா மாறியுள்ளது.நமது விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை சந்திரயான்-2 நிரூபித்துள்ளது.விண்வெளி குறித்த வினா விடை போட்டியில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். போட்டிக்கான விவரம் குறித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் என்று உரையில் தெரிவித்தார்.