2வது முறையாக நியூசியில் கர்ஜிக்கும் ஜெசிந்தா..பிரதமர் வாழ்த்து!

நியூசிலாந்தில்இரண்டாவது முறை வெற்றி பெற்றதற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டென்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றார்.

பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது.மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

2வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில்

நியூசிலாந்தின் 2 முறையாக ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் ஜெசிந்தா ஆர்டெனுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்த பிரதமர் கடந்தாண்டு சந்திப்பை நினைவு கூர்வதாகவும் மேலும் இந்தியா-நியூசி., உறவு வலுவடையும் என்று தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் உலக தலைவர்கள் பலரும்  பிரதமர் ஜெசிந்தாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



author avatar
kavitha