” இந்தியா யாருக்கும் அடிபணியாது ” பிரதமர் மோடி ஆவேசம்…!!

  • பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை தீவிரவாதிகள் முகம் மீது தாக்குதல் நடத்தியது.
  • இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் பேசினார்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வந்த முகாம்கள் இந்தியாவின் தாக்குதலில் தரை மட்டமாக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க பாதுகாப்பு படையினரே காரணம். யாரிடமும் இந்தியா அடிபணியாது. நான் எதற்காகவும் , யாருக்காகவும் நாட்டை விட்டு கொடுக்கமாட்டேன். நாட்டு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய விமானப்படையினர்களுக்கு தலை வணங்குகின்றேன். நாட்டிற்கு எதிரான எந்த செயலையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என்று மோடி ஆவேசமாக பேசினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment