சர்வதேச அரிசி ஆய்வு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்…!!!

வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அரிசி ஆய்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய விதைகள் பரிசோதனை நிலைய வளாகத்தில் அரிசி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. இதனை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மையம் முழுவதையும் பார்வையிட்டார். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த அரிசி வகைகளை கேட்டறிந்ததுடன், அரிசி சோதனை செய்யப்படும் முறையையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment