3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!ஐஸ்லாந்து சென்றடைந்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

சுவிசர்லாந்து,ஐஸ்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் ராம்நாத் கோவிந்த் முதல்கட்டமாக ஐஸ்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.

இரு நாடுகளின்  பொருளாதார உறவுகளை  மேம்படுத்துவது குறித்து பேச உள்ளார்.மேலும் ஐஸ்லாந்து நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.இந்த பயணத்தை முடித்து கொண்டு வருகின்ற 11-ஆம் தேதி சுவிசர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.சுவிசர்லாந்தில் இருந்து வருகின்ற 15-ஆம் தேதி ஸ்லோவேனியா நாட்டிற்கு செல்கிறார் ராம்நாத் கோவிந்த்.