மத்திய பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் – நிதி அமைச்சர் கருத்து !

மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் நாட்டிற்கான மொத்த பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு  குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பொழுது எதிர்கொண்ட சவால்களை விட இந்த முறை அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மோடியின் இரண்டாம் பதவி காலம் காலத்தில் தயாராகும் இந்த பட்ஜெட் ஆனது முழு ராணுவ பலத்துடன் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் மத்திய நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.