” உயிரை இழக்க தயார் ” மாஸ் காட்டும் மம்தா…!!

மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்வதை விட உயிரை இழக்கவும் தயார் என மேற்குவங்க முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் ஆணையர் வீட்டில் ஆலோசனை நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அவர் மத்திய அரசு C.B.I_யை தவறாக பயன்படுத்துகின்றது . முறையாக அனுமதி பெறாமல் விசாரணை நடத்துவது ஏற்புடையது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டு தொடர்ந்து மூன்றாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மமதா தெரிவிக்கையில் பல்வேறு எதிர்கட்சியினரிடம் பேசி விட்டு போராட்டம் தொடரவா அல்லது கைவிடவா என்று முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்ற அவர் அடிபணிந்து செல்வதை விட உயிரை இழக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment