கர்ப்பமான கன்னியாஸ்திரிகள்! திருச்சபை மேற்கொண்ட அதிரடியான முடிவு!

இத்தாலி நாட்டின் சிசிலியில் தனி பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் இருவர், ‘உங்களது தொண்டு சேவை’ என்ற பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு  சென்றவர்களில்,34 வயதுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் வயிற்று வழியால் துடித்துள்ளார்.
இதனையடுத்து கன்னியாஸ்திரியை பரிசோதித்த மருத்துவர், கன்னியாஸ்திரி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த கன்னியாஸ்திரி ஒருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறு கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் துறவு வாழ்க்கையை விட்டு விலகுவதற்கான முயற்சிகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து ரோமில் உள்ள திருச்சபை ஒன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இரண்டு கன்னியாஸ்திரிகளும், தங்களது சொந்த நாட்டிற்கு  சென்ற போது வெளிப்படையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவர் மீதும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இருவரும் கற்புக்கான விதிமுறைகளை மீறியதாகவும், இவருக்கு இருவரும் இனி துறவு வாழ்க்கை மேற்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.