பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி யானை.. விளக்கம் கேட்ட மத்திய அரசு!

பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி யானை.. விளக்கம் கேட்ட மத்திய அரசு!

கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து கேரள அரசுக்கு விளக்கமளிக்ககோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் இருந்தது. அதுமட்டுமின்றி, யானை 

மேலும் அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை முடியில், அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மனிதாபிமானமற்ற முறையில், யானையை கொன்ற காட்டுமிராண்டிகளுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகிற நிலையில்,  ட்விட்டரில் RIP HUMANITY என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

இதனையடுத்து, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு விரைவில் கைது செய்யப்படுவர் எனவும் உறுதி அளித்தார்.

அதுமட்டுமின்றி, ஹியூமன்இ சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற தனியார் ,குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்கும் நபருக்கு ரூ.50,000 சன்மானம் வழங்கப்டும் என அறிவித்துள்ளது. மேலும், யானை உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Join our channel google news Youtube