முகநூலில் சுத்தியல் புகைப்படத்தை வெளியிட்டு, அதற்க்கு பதிவிடப்பட்ட பதிலால், pray for nesamani என்ற ஹேஸ்டேக் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ட்ரெண்டானது. தற்போது, pray for nesamani என்ற வாசகம் அடிக்கப்பட்ட டி-ஷார்ட்டுகளும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பலரும் பல விதமாக இதனை பயன்படுத்தினாலும், காவல்துறையினர் இதனை வித்தியாசமான முறையில் பயன்படுத்துகின்றனர். நேசமணி தலையில் சுத்தியல் விழுவது போன்ற புகைப்படத்தில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம், விபத்துக்களை தவிர்க்க, தலைக்கவசம் அணிவீர் என்ற வாசகத்தை பதிவிட்டுள்ளனர்.