அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த பிரபாஸ்! காரணம் இதுதானாம்!

  • அனுஷ்காவுடன் நடிக்க மறுத்த பிரபாஸ்.
  • அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் பிரபாஸ் ‘சாஹோ’ படத்திற்கு பின் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இத்தாலியில் நடந்தது. பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பூஜா ஹெக்டேக்கு பதிலாக, நடிகை அனுஷ்கா தான் நடிக்க இருந்தார். ஆனால், இதனை நடிகர் பிரபாஸ் வேண்டாம் என்று மறுத்து  விட்டார். இதற்க்கு காரணம் என்னவென்றால், பாகுபலி படத்திற்கு பின் அவர்களை இணைத்து காதல் கிசுகிசு, திருமண வதந்திகள் பரவியதால், அனுஷ்காவிற்கு பதிலாக வேறு நடிகையை தேர்வு செய்யும் படி பிரபாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் தான் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.