பாகிஸ்தானில் நிலநடுக்கம் ! மக்கள் பீதி

பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. சாலைகள் துண்டிப்பு, ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.இந்த நிலநடுக்கம் இந்தியாவில் உள்ள வடமாநிலங்களிலும் உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.