அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவு…!

அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது.
இன்று திடீரென  வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.ஆனால் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக  இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது.
இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது. உயிர் சேதம் அதிகரிக்கும் என்ற அடிப்படையிலே எண்ணிக்கை அறிவித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1203_ ஐ எட்டியுள்ளது.மின்சாரம் , தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment