தமிழகத்தில் மின்வெட்டே இல்லை…! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!!!

தமிழக அரசு  தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மின்வெட்டு இல்லை எனவும் தேவையான நிலக்கரியை வழங்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக மின்சாரத் துறை செயலாளர் நஸிமுதீன், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் விக்ரம் கபூர் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது தெரிவித்த அரசு வழக்கறிஞர் தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை எனவும் மின் உற்பத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மத்திய அரசும் உறுதி அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் தமிழக அரசின் பதில் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்த நீதிபதி கிருபாகரன், விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment