இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்…!அமைச்சர் தங்கமணி

கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  அமைச்சர் தங்கமணி  கூறுகையில், பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் .புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்.
அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்  என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Leave a Comment