முதல் தீவிரவாதி ஒரு இந்து – கமல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

கமல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட விசாரணையை  டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார்.இவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் ஒரு பகுதியாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இந்து சேனா அமைப்பு சார்பாக கமல் பேசியதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இன்று  இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அப்போது விசாரணையை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த‌து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.