#BREAKING : அஞ்சல் தேர்வு ரத்து !தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடக்கும்!மத்திய அமைச்சர் அறிவிப்பு

அஞ்சல் துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று  மத்திய அரசு  வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள்.

இந்த நிலையில்  அஞ்சல் துறை தேர்வு  ஜூலை 14 ஆம் தேதி நடைபெற்றது.ஆனால்  மாநிலங்களவையில் அஞ்சல்  துறை தேர்வு விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக – திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர் .அமளி காரணமாக இன்று  அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் அவை மீண்டும் தொடங்கியதும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.மேலும்  தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடக்கும் என உறுதி அளித்துள்ளார்.