கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இலங்கையில் நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு எந்த வன்முறையும் இல்லாமல், நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது.

இலங்கை முழுவதும் சுமார் 10,000 சுகாதார அதிகாரிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தபால் வாக்குபதிவு மொத்தம் 5 நாட்கள், 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த வாரத்தில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க தவறும் அரசு ஊழியர்கள், 2ம் கட்டமாக அடுத்த வாரம் 2 நாட்கள் நடைபெறும் தபால் வாக்குப்பதிவில் வாக்களிக்கலாம்.

இந்த தபால் வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.