நேற்று நடந்த போட்டியில் தோனி 7வது இடத்தில் இறங்கியது ஏன்..?

நேற்று டி20 தொடரின் 4-வது லீக் போட்டியில் சென்னை VS ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 216 ரன்கள் எடுத்தது.

அதற்கு பிறகு களம் இறங்கிய சென்னை அணி 5 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் இந்த தோல்வி குறித்து தோனி கூறியதாவது, நான் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை.

14 நாட்கள் தனிமைப்படுத்தலும் ஆட்டத்திற்கு உதவவில்லை. நான் மெதுவாக தொடருக்குள் நுழைந்து கொண்டு இருக்கிறேன். அதே போல் பலதரப்பட்ட விஷயங்களையும் நாம் முயற்சிக்க வேண்டி உள்ளது, அதாவது சாம் கரண் அல்லது ரவீந்திர ஜடேஜாவை முன்னால் இறக்கிப் பார்க்க வேண்டி உள்ளது.

மேலும் 217 ரன்கள் விரட்டுவதற்கு ஒரு நல்ல தொடக்கம் வேண்டும் அது எங்களுக்கு நிகழவில்லை. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் மிகவும் சிறப்பாக விளையாடினார். மேலும் எங்களது அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் பிழை செய்தனர் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது கேப்டனும் எம்எஸ் தோனி 7 ஆளாக இறங்கியது, சாம் கரணை முன்னாள் இறங்குவதற்கு முன்பு தோனி முன்னாள் இறங்கிருக்கிருக்க வேண்டும் மிகவும் சிறப்பாக இறங்கியிருந்தால் கண்டிப்பாக அணி வெற்றி பெற வைத்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.