கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல தெலுங்கு நடிகர் படத்திற்கு வந்த சிக்கல்!

  • கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல தெலுங்கு நடிகர் படத்திற்கு வந்த சிக்கல்.
  • ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார்.

இயக்குனர் சாலமன் இயக்கத்தில், உருவாகி வரும்  திரைப்படம் ‘வைல்டு டாக்’ என்ற படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை, சையாமி கேர் நடிக்கிறார். இந்த படத்தில் நாகர்ஜுனா தேசிய பாதுகாப்பு படை வீரராக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாய்லாந்திலும் கடுமையாகப் பரவி இருப்பதால் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து இந்த படத்தின் கதாநாயகியான சையாமி அவர்கள் கூறுகையில், ‘இந்த படத்துக்காக கடந்த ஒரு மாதமாக தற்காப்புக் கலை பயிற்சி பெற்று வந்தேன். அதோடு தாய்லாந்தில் நடக்கும் ஷூட்டிங்கை ஆவலோடு எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக, படக்குழு ஷூட்டிங்கை தள்ளி வைத்துவிட்டது.’ என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.