இன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்! பொன்னியின் செல்வன்!

இன்று முதல் தொடங்கியது மணிரத்னத்தின் பிரம்மாண்டம்! பொன்னியின் செல்வன்!

  • மணிரத்தினம் இயக்கத்தில் அடுத்த உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
  • இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இன்று முதல் சூட்டிங் ஆரம்பிக்கிறது.

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் தற்போது தயாராகி விட்டார். இப்படத்திற்கான லொகேஷன் பார்க்கும் பணிகள் நிறைவு பெற்று, இன்று முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கபட உள்ளது. இப்படத்தினை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இரு பாகங்களாக தயாரிக்க உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், லால், ஐஸ்வர்யாராய் என பலர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். பிரம்மாண்டமாக உருவாக உள்ள இத்திரைப்பட ஷூட்டிங் இன்று முதல் தாய்லாந்திலுள்ள அடர் காட்டில் நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார். இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube