சூர்யா – ஜோதிகா கூட்டணியில் உருவான புதிய படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது! விரைவில் ரிலீஸ்!

சூர்யா – ஜோதிகா கூட்டணியில் உருவான புதிய படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது! விரைவில் ரிலீஸ்!

நடிகை ஜோதிகா தற்போது தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக கடந்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான 36 வயதினிலே, காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்கிவருகிறார். ’96’ படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முடிந்துள்ளது. அந்த படப்பிடிப்பின் கடைசி நாளில் தயாரிப்பாளர் சூரிய கலந்துகொண்டார்.  தற்போது அப்படத்தின் கடைசிநாள் ஷூட்டிங் புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி அக்காவாகவும், நடிகர் கார்த்தி ஜோதிகாவின் தம்பியாகவும் நடித்துள்ள தம்பி திரைப்படம் டிசம்பரில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube