பொள்ளாச்சி பாலியல் சம்பவம் – குற்றவாளிகள் 9 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது !

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் – குற்றவாளிகள் 9 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது !

பொள்ளாச்சி அருகே 16 வயது மாணவி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மீது போக்சோ சட்டம் பதிவு செய்துள்ளது. கைதான 9 பேறரும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது பாலியல் சம்பவம் நடந்த நிலையில், தற்போதைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Join our channel google news Youtube