ஓவைசி பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என கோஷம்… புயலை கிழப்பும் அதிர்ச்சி சம்பவம்…

ஓவைசி பங்கேற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வாழ்க என கோஷம்… புயலை கிழப்பும் அதிர்ச்சி சம்பவம்…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அரசியலமைப்பைக் காப்போம் என்ற தலைப்பில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணிக்கு அசாதுதீன் ஒவைஸிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் அவர் கலந்து கொண்டு மேடையில் ஒவைஸி மேடை ஏறியதும் திடீரென ஒரு பெண் மேடையில் ஏறி  மைக்கில் ‘பாகிஸ்தான் வாழ்க’ ‘பாகிஸ்தான் வாழ்க; என்ற முழக்கத்தை எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார்.இதனால், மேடையில் இருந்த ஒவைஸி செய்வதறியாத திகைத்து அந்தப் பெண்ணின் கையில் இருந்த மைக்கை வாங்க முயற்சித்தார். இதையடுத்து, காவல் துறையினர் மேடையேறி அவரை மேடையிலிருந்து  கீழே இறக்கினர். இதன்பின் பேசிய ஒவைஸி, “அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் மற்றும் என்னுடையக் கட்சிக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.இந்த  நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அவரை இங்கு அழைத்திருக்கக் கூடாது. இது தெரிந்திருந்தால் நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன். நாங்கள் இந்தியாவுக்காக இருக்கிறோம். எதிரி நாடான பாகிஸ்தானை எந்தவிதத்திலும் ஆதரிக்க மாட்டோம். எங்களுடைய ஒட்டுமொத்த பயணமே இந்தியாவைப் பாதுகாப்பதுதான்” என்றார். இந்த விவகாரம் இந்திய மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube