கோலியை பார்க்க மைதானத்தில் ஓடி வந்த ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு..!

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

கடந்த 18-ம் தேதி நடந்த 2-வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மூன்று ரசிகர்கள் தடுப்பை மீறி மைதானத்திற்கு நுழைந்துள்ளனர். சந்திப் குமார் என்ற ரசிகர் கோலியுடன் கைகுலுக்க வேண்டுமென போலீசாரை ஏமாற்றி மைதானத்துக்குள் நுழைந்தார்.

மற்றொரு கோலி ரசிகரான  ராஜேஷ்குமார் ரசிகர்களின் தடுப்பை எகிறி குதித்து உள்ளே வந்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகரான பவன்குமார் போலீசார் தடுக்க முயன்றபோது அவரை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார்.

இவர்கள் 3 பேருரையும்  பிடித்த காவல்துறை பணியை செய்யவிடாமல் தடுத்தல் என்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில்  தற்போது அவர்கள்  14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

author avatar
murugan