மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!

மத்திய பல்கலைக்கழகத்திற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது.!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு இன்று தொடங்கியது. திருவாரூரில் 5 மையங்களில் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. மேலும், சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், கடலூர், திருச்சி ஆகிய  மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு தொடக்கி நடைபெற்று வருகிறது.

வழக்கமாக இந்த தேர்வு ஆண்டுத்தோறும் மே மாதம் நடைபெறும் ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்வு இன்று முதல் 20- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

நுழைவுத்தேர்வு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரையும், மதியம் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் தேர்வு நடைபெறும்.

author avatar
murugan
Join our channel google news Youtube