லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆணையர் ! கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான  தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றது.

இந்நிலையில் சென்னை அசோக் நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .கைதான உதவி ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment