25 லட்சம் மதிப்பிலான குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்…!!

வேலூர் அரக்கோணம் அருகே 25 லட்சம் மதிப்பிலான குட்கா, பான்மாசாலா  உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தில் தக்கோலம் பகுதியில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அந்த காரை சோதனை செய்ததில் 25 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட லட்சுமிகாந்தன், ராமசந்திரன் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment