இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரை.!

இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் கருத்தரங்கு கூட்டத்தில் வளர்ச்சியை மீண்டும் பெறுதல் என்ற தலைப்பில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதனிடையே நேற்று கர்நாடகாவில் ரஜீவகாந்தி பல்கலைக்கழக வெள்ளி விழாவை காணொலி மூலம் தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, வீரர்களுக்கான உடையை அணியாத போர் வீரர்களாக நமது மருத்துவர்கள் உள்ளனர் தெரிவித்திருந்தார். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நமது நாட்டு மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் கூறியிருந்தார். மேலும், 2025 ஆம் அங்குக்குள் நாட்டிகளிருந்து காசநோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்