நெருங்கிவிட்டது ஜார்கண்ட் தேர்தல்! பொதுக்கூட்டம், பேரணி என களத்தில் இறங்கும் பிரதமர் மோடி!?

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதி முதல், மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக பிரதான முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது. ஆளும் பாஜக நேற்று முதல் பிரமாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சி மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு பேசி வருகின்றனர். இந்நிலையில் வருகிற 25ஆம் தேதி பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநில சட்டமன்ற பிரசாரத்திற்காக செல்ல உள்ளாராம்.
மேதினி நகர் மற்றும் கும்லா ஆகிய பகுதிகளில் நடக்கவுள்ள பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளாராம். அதனை அடுத்து முதல்கட்ட தேர்தல் 30-ஆம் தேதி முடிந்தவுடன், இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் ஜம்தேஸ்பூரில் நடைபெற உள்ள பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.