பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு! மாமல்லபுரத்தில் விடுதிகளுக்கு நிபந்தனை

மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்து தங்கினால் உடனடியாக தெரிவிக்க காவல்துறை நிபந்தனை வழங்கியுள்ளது.

சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில்  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால்  மாமல்லபுரம்   சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி-சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி  ஏஎஸ்பி தலைமையில் தனியார் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சந்தேகத்திற்குரிய நபர்கள் வந்து தங்கினால் உடனடியாக தெரிவிக்க காவல்துறை நிபந்தனை வழங்கியுள்ளது.