பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு ! முதலமைச்சர் பழனிசாமி மாமல்லபுரத்தில் ஆய்வு

பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு ! முதலமைச்சர் பழனிசாமி மாமல்லபுரத்தில் ஆய்வு

முதலமைச்சர் பழனிசாமி இன்று  மாமல்லபுரம் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில்  சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இரு தலைவர்களும் மாமல்லபுரத்தில் உள்ள புராதனச் சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர் .இதனையடுத்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.இதில்  முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாமல்லபுரம்   சுற்றுவட்டார பகுதிகளில்  பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று  மாமல்லபுரம் செல்கிறார்.அங்கு  பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

Join our channel google news Youtube